1.வானம்.




    விண்வெளியில்
    விழாக்கோலங்கள்
    இடி இடி இடிக்க-மத்தலங்களாய்...

    மழை சல சலக்க-அது
    வீணைகளாய்...

    மின்னல்கள் மின்மினுக்க
    அலங்கார விளக்குகளாய்...

    அட..அடடா...
    என்ன இத்தனை அதிசயங்கள்
    விண்வெளியில்...

    ஆம்,
    இது கடவுளின் படைப்பா
    இல்லை
    இயற்கையின் அதிசயமா-இத்தனை
    நிகழ்வுகள் நடக்குமா
    விண்வெளியில்...

    ஆம்,
    இதனால் தானோ
    உலகம் போட்டிபோடுகின்றன
    உன்னை அடைவதற்கு...

    இல்லை.. இல்லை...
    இப்படியொரு நிகழ்வு- ஏன்
    மனித குலத்திற்கு நிழவில்லை...


    வெறும் போர் இயற்கை அழிவுகள் மட்டும்
    நிகழ்கிறதே-அவை
    கடல் கொந்தளிப்பாலும்,
    பூமி சீற்றங்களாலும்,
    வெள்ளப்பெருக்காலும்,
    காற்றின் சூறைகளாலும்,..

    ஆம்,..
    இன்னும் எத்தனை
    நிகழ்வுகள் நடக்கிறதோ...

    நடக்க போகிறதோ
    எந்தாயே...

    ஏன்?
    பிடிக்கவில்லையா?
    இவர்களின் வளர்ச்சியைக் கண்டு...
    ..........................................
    இராச.

Comments